டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மாதவன் தமிழில் அறிமுகமான படம் அலைபாயுதே. மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தில் அஜீத்தின் மனைவியான ஷாலினிதான் நாயகியாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆனால் அதையடுத்து தான் இயக்கிய படங்களுக்கு அவரை பயன்படுத்தாத மணிரத்னம், இப்போது துல்கர்சல்மான்-நித்யாமேனனை வைத்து தான் இயக்கி வரும் ஓகே கண்மணி படத்தில் மீண்டும் பிசிஸ்ரீராமுடன் இணைந்துள்ளார்.
அதோடு, இந்த ஓகே கண்மணி படம் மெளனராகம் படத்தின் ரீமேக் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இப்போது அலைபாயுதே படம் பாணியில்தான் தனது புதிய படத்தை மணிரத்னம் இயக்கி வருவதாக செய்தி கசிந்துள்ளது. இன்றைய தருவாயில் எத்தனையோ நவீன காதல் கதைகள் வந்து கொண்டிருந்தாலும் அவை அனைத்தையும் விட வித்தியாசமான கோணத்தில் காதலை அணுகியுள்ளாராம் மணிரத்னம்.
மேலும் இதற்கு முந்தைய படங்களை வருடக்கணக்கில் எடுத்து வந்த மணிரத்னம், இந்த படத்தை இரண்டே மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளாராம். அதற்கேற்ப துல்கர்சல்மான்-நித்யாமேனன்-பிரகாஷ்ராஜ், கனிகா என முக்கிய வேடங்களில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுமே ஸ்பாட்டில் தயார் நிலையில் இருக்கிறார்களாம்.
இதற்கிடையே தற்போது லிங்கா, ஐ, காவியத்தலைவன் என்று பிசியாக இசையமைத்துக் கொண்டிருக்கும் ஏ.ஆர்.ரகுமானும், விரைவில் மணிரத்னத்துக்கு சில பாடல்களை கம்போஸ் செய்து கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்திருக்கிறாராம். ஆக, திட்டமிட்டபடி படத்தை வேகமாக மணிரத்னம் முடிப்பதற்கான சூழ்நிலைகளும நிலவியிருக்கிறது.