டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
1993ம் ஆண்டு சஞ்சய் தத் நடித்து சுபாஷ் காய் இயக்கத்தில் வெளியான கல்நாயக் படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், அதற்காக படத்தின் உரிமையை பெறுவது தொடர்பாக சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் சுபாஷ் காய் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கடந்த வாரங்களுக்கு முன் செய்திகள் கசிந்தது. சுபாஷ் காயை அனுகிய சஞ்சய் லீலா பன்சாலி, தான் கல்நாயக் படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக கூறினாராம்.
ஆனால் சுபாஷோ, தனது படங்களை ரீமேக் செய்யும் உரிமையை, விருது பெற்ற சிறந்த இயக்குனர்களை தேர்வு செய்தே வழங்க நினைத்திருப்பதாகவும், அவ்வாறு தான் மதிக்கும் இயக்குனர்களில் சஞ்சய் லீலா பன்சாலியும் ஒருவர் என்றும் கூறி உள்ளார். அதேசமயம், தனது படங்களில் மிக முக்கியமானதாக கருதும் கல்நாயக் படத்தின் உரிமையை யாருக்கும் தரும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் கூறி மறுத்து விட்டாராம். இதனால் கல்நாயக் படத்தை ரீமேக் செய்யும் எண்ணத்தை கைவிட்ட பன்சாலியும், தான் இயக்கி வரும் பஜிராவ் மஸ்தானி படத்தின் வேலைகளில் தீவிரமாக இறங்கி விட்டாராம்.மேலும் புதிய படங்கள் பற்றி சிந்திக்க தனக்கு தற்போது நேரம் இல்லை எனவும் அவர் தெரிவித்து விட்டாராம்.