கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
1993ம் ஆண்டு சஞ்சய் தத் நடித்து சுபாஷ் காய் இயக்கத்தில் வெளியான கல்நாயக் படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், அதற்காக படத்தின் உரிமையை பெறுவது தொடர்பாக சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் சுபாஷ் காய் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கடந்த வாரங்களுக்கு முன் செய்திகள் கசிந்தது. சுபாஷ் காயை அனுகிய சஞ்சய் லீலா பன்சாலி, தான் கல்நாயக் படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக கூறினாராம்.
ஆனால் சுபாஷோ, தனது படங்களை ரீமேக் செய்யும் உரிமையை, விருது பெற்ற சிறந்த இயக்குனர்களை தேர்வு செய்தே வழங்க நினைத்திருப்பதாகவும், அவ்வாறு தான் மதிக்கும் இயக்குனர்களில் சஞ்சய் லீலா பன்சாலியும் ஒருவர் என்றும் கூறி உள்ளார். அதேசமயம், தனது படங்களில் மிக முக்கியமானதாக கருதும் கல்நாயக் படத்தின் உரிமையை யாருக்கும் தரும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் கூறி மறுத்து விட்டாராம். இதனால் கல்நாயக் படத்தை ரீமேக் செய்யும் எண்ணத்தை கைவிட்ட பன்சாலியும், தான் இயக்கி வரும் பஜிராவ் மஸ்தானி படத்தின் வேலைகளில் தீவிரமாக இறங்கி விட்டாராம்.மேலும் புதிய படங்கள் பற்றி சிந்திக்க தனக்கு தற்போது நேரம் இல்லை எனவும் அவர் தெரிவித்து விட்டாராம்.