கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
பாலிவுட் டைரக்டரான அனுராக் காஸ்யாப், ஹாலிவுட் படம் ஒன்றை இயக்கப் போகிறாராம். இது கிரைம் தில்லர் கதையாம். ஏற்கனவே இவர் இயக்கிய அக்லி மற்றும் பாம்பே வெல்வட் ஆகிய பாலிவுட் படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.
இருந்தாலும் சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், இவரை ஹாலிவுட் படம் இயக்க தூண்யடிதாம். முற்றிலும் மேற்கத்திய தயாரிப்பாக உருவாக்கப்பட உள்ள இந்த படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் துவங்க உள்ளது. சர்வதேச தரத்தில் தயாரிக்கப்பட உள்ள இந்த படம் அவரது பாம்பே வெல்வெட் படம் வெளியான பிறகே துவங்கப்பட உள்ளதாம்.
சர்வதேச அளவில், மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட உள்ளதால் அதன் வேலைகளில் சீரியசாக இறங்கி உள்ளாராம் அனுராக். இதனால் அப்படம் பற்றிய தகவல் ஏதும் தர தான் விரும்வில்லை என தெரிவித்துள்ளார். எனவே ஹாலிவுட் தரத்திற்கு போட்டி போடும் அளவில் அனுரக் என்ன செய்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள நாம் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டி உள்ளது.