கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
தெலுங்கானா, ஆந்திரப் பிரதேச அரசுகளுக்கிடையே கடந்த சில வாரங்களாகவே மோதல்கள் எழுந்து வருகின்றன. ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதிலிருந்தே தெலுங்குத் திரையுலகின் மையம் எங்கு உருவாகும் என்பது இன்னும் சந்தேகமாகவே உள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் தனியாக தெலுங்கானா திரைப்பட வர்த்தக சபை என்ற அமைப்பை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார்கள். இதனிடையே நேற்று ஆந்திர மாநிலம் குண்டூரில் சீமாந்திரா திரைப்பட வர்த்தக சபை என்ற புதிய அமைப்பும் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் விஜயவாடா மற்றும் குண்டூர் நகரங்களுக்கிடையே உருவாக உள்ளதாக ஏற்கெனவே சொல்லப்பட்டு வருகிறது. அதனால், விஜயவாடா தெலுங்குத் திரையுலகின் மையமாக உருவாகும் வாய்ப்பு அதிகம் என்பதாலேயே அங்கு திரைப்பட வர்த்தக சபை ஆரம்பிக்கப்பட்டதாக தெலுங்கு இயக்குனர் திலீப் ராஜா என்பவர் தெரிவித்துள்ளார். தெலுங்குத் திரையுலகம் ஹைதராபாத்திலிருந்து, ஆந்திர மாநிலத்திற்கு மாறும் போது அது விசாகப்பட்டிணத்திலோ அல்லது நெல்லூரிலோதான் உருவாகும் என்ற கருத்தும் இருந்தது. ஆனால், திரையுலகத்தைச் சேர்ந்த பலர் திரைப்பட அமைப்பு, அதன் தலைநகரத்திற்கருகில் உருவாவதுதான் சிறந்ததாக இருக்கும் என கருத்து தெரிவித்ததாலேயே விஜயவாடாவுக்கு அருகில் ஆரம்பித்தோம். விஜயவாடா தெலுங்குத் திரையுலகின் வீடாக உருவாகும் போது, விசாகப்பட்டிணம் முழுமையாக படப்பிடிப்பு நடைபெறும் மாநகரமாக மாறும் என்றும் திலீப் ராஜா தெரிவித்துள்ளார்.
இரு மாநில அரசுகளும் மோதிக் கொள்வதைப் பார்க்கும் போது தெலுங்குத் திரையுலகம் சீக்கிரமே சீமாந்திரா பகுதிக்கு மாறிவிட வாய்ப்புள்ளதாகவே பலரும் கருதுகிறார்கள்.