தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒருவழியாக தீபாவளி அக்கப்போர் முடிந்து விட்டது. அடுத்து பொங்கல் பரபரப்பு ஆரம்பித்து விட்டது. தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட ஐ பொங்கலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி வெளியாகும் என்று கூறிவந்த லிங்கா படமும் தற்போது பொங்கலுக்கு கட்டாயம் வெளியாகயிருப்பதாக உறுதிபடுத்தியுள்ளனர்.
இதற்கிடையே விஸ்வரூபம் படத்தையடுத்து கமல் நடித்த விஸ்வரூபம்-2 பற்றிய எந்த தகவலும் இல்லாதபோது, உத்தமவில்லன் பொங்கலுக்கு வருவதற்கு தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நேரத்தில் சித்தார்த்-ப்ருத்விராஜ் நடித்துள்ள காவியத்தலைவன் படத்தையும் பொங்கல் திருநாளில் திரைக்கு கொண்டு வரும் முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.
லிங்கா, ஐ, உத்தமவில்லன் என்ற மூன்று பெருந்தலைகளின் படம் வரும் நேரத்தில் சித்தார்த்தெல்லாம் தாக்குப்பிடிப்பாரா? என்ற கேள்விகளும் எழுந்திருக்கும் நிலையில், நல்ல கதையில் உருவாகியிருக்கும் காவியத்தலைவனை ரசிகர்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால் யார் வந்தாலும் கவலையில்லை. நாங்கள் பொங்கலுக்கு வருவது எப்போதோ உறுதி செய்தாகி விட்டது என்று தில்லாக பதில் கொடுக்கிறது காவியத்தலைவன் யூனிட்.
ஆனால், இப்போதைக்கு தில்லாக பேசினாலும், பொங்கல் திருநாள் நெருங்கும் நேரத்தில் களத்தில் நிற்பார்களா? இல்லை இடறி ஓடுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.