நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? |
இந்திப்பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திய ஸ்ரீதேவி, பின்னர் ஜானவி, குஷி என்ற இரண்டு மகள்களை பெற்றெடுத்து அவர்களை வளர்ப்பதற்காக தனது முழு நேரத்தையும் செலவிட்டு வந்தார். ஆனால், அவர்கள் 15 வயதை கடந்து விட்ட பிறகு மீண்டும் ஸ்ரீதேவியின் கவனம் சினிமா பக்கம் திரும்பியது.
பாலிவுட்டில் உள்ள பல டைரக்டர்களிடம் தனக்கு பொருத்தமான கதையை கேட்டு வந்த ஸ்ரீதேவிக்கு, கெளரி ஷிண்டே என்ற பெண் இயக்குனர் சொன்ன இங்கிலீஷ் விங்கிலீஷ் கதை பிடித்து விட அந்த படத்தில் லீடு ரோலில் நடித்தார். தமிழ், இந்தியில் உருவான அந்த படத்தில் அஜீத்தும் கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுத்தார்.
அந்தவகையில், 18 வருடங்களுக்குப்பிறகு மீண்டும் ரசிகர்களை சந்தித்த ஸ்ரீதேவியின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் 2012ல் வெளியான அப்படத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜப்பான் மொழியில் டப் செய்து வெளியிட்டனர். அங்குள்ள ரசிகர்களும் பலத்த வரவேற்பு கொடுத்ததால், தற்போது ருமேனியா மொழியிலும் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தை டப் செய்து வெளியிடப் போகிறார்களாம். இதனால் உற்சாகத்தில் இருக்கும் ஸ்ரீதேவி, ஜப்பானில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்கள் முன்பு தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்தது போன்று, ருமேனியாவில் படம் வெளியாகும்போதும் அங்கு விசிட் அடித்து ரசிகர்களுக்கு நேரடி தரிசனம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளாராம்.