ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் |
'கத்தி' படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இந்த ஆண்டு தொடர்ச்சியாக மூன்று ஹிட் படங்களைக் கொடுத்து ஹாட்ரிக் அடித்திருக்கிறார். '3' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத்திற்கு குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய ஹீரோ விஜய், இயக்குனர் ஏஆர்.முருகதாஸ் ஆகியோருடன் இணைந்து 'கத்தி' படத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்ததுமே பலர் ஆச்சரியத்தில் மூழ்கிப் போயினர். ஏ.ஆர்.முருகதாஸ் கடந்த சில படங்களாக அவருடைய படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜையே இசையமைப்பாளராக பயன்படுத்தி வந்தார். அவரும் திடீரென அனிருத் பக்கம் சாய்ந்தது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
'கத்தி' படத்தில் இடம் பெற்ற “செல்ஃபி புள்ள..., ஆத்தி..., பக்கம் வந்து..., யார் பெற்ற மகனோ...” என ஒவ்வொரு பாடலும் வெரைட்டியாக அமைந்து மீண்டும் ஒரு மியூசிக்கல் ஹிட்டைக் கொடுத்து விட்டார். இந்த ஆண்டில் இதற்கு முன் அவர் இசையமைத்து வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே” ஆகிய படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தது. அந்தப் படங்களின் பாடல்களும் ஹிட்டான பாடல்களாக அமைந்தது. அனிருத் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை இதுவரை பத்து என்பதைக் கூடத் தாண்டவில்லை. அதற்குள்ளாக பரபரப்பாக பேசப்படும் இசையமைப்பாளராக மாறிவிட்டார்.