கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
சின்னத்திரையில் முதன் முறையாக திகில் சீரியல்களை கொண்டு வந்தவர் நாகா. அவர் இயக்கிய பல திகில் சீரியல்கள் மிகவும் பாப்புலர், மர்மதேசம், ருத்ரவீணா, சிதம்பர ரகசியம் போன்றவை அதில் முக்கியமானவை. அதன் பிறகு அனந்தபுரத்து வீடு என்ற காமெடி திகில் படத்தை இயக்கினார். அதன் பிறகு இப்போது மீண்டும் ஒரு திகில் படத்துக்கான கதையை தயார் செய்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் சீரியல் இயக்க வந்த பல வாய்ப்புகளை மறுத்திருக்கிறார் நாகா.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: அடுத்த சினிமாவுக்கான முன் தயாரிப்பில் இருக்கிறேன். மீண்டும் சீரியல் இயக்கும் எண்ணமே இல்லை. அதனால்தான் சில வாய்ப்புகளை தவிர்த்தேன். எப்போதும் சினிமா தொடர்பான வேலைகளைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். அதனால் இப்போது சீரியல்களை பார்ப்பதுகூட இல்லை. பல சீரியல்களின் கதை ஒன்றுபோல இருப்பதாக எங்கள் வீட்டு பெண்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். அந்த நிலை எனக்கும் வரக்கூடாதல்லவா அதுதான் சீரியல் பார்ப்பதில்லை. விரைவில் சினிமாவில் சந்திப்போம். என்கிறார் நாகா.