கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
இந்தியாவில் முதன் முறையாக தென் ஆப்பிரிக்க திரைப்பட விழா சென்னையில் துவங்கியது. புதுடில்லியில் உள்ள தென் ஆப்பிரிக்க தூதரகமும், சென்னை இண்டோ சினி அப்ரிஷியேஷன் பவுண்டேஷன் அமைப்பும் இணைந்து இதனை நடத்துகிறது. ரஷ்யன் கல்சுரல் செண்டரில் நடந்த துவக்க விழாவில் கலந்து கொண்டு தென் ஆப்பிரிக்க துணை தூதர் மொகலா துவக்கி வைத்தார். அவர் பேசும்போது "நான் இந்திய சினிமாவை நேசிக்கிறேன். ரசிக்கிறேன். இந்தியாவுடன் தென் ஆப்பிரிக்க கலை மற்றும் கலாச்சார உறவின் ஒரு பகுதியாக இந்த திரைப்பட விழாவை கருதுகிறேன். முதன் முறையாக இது நடத்துப் படுவது மகிழ்ச்சிக்குரியது" என்றார்.
விழாவில் இண்டோ சினி அப்ரிஷியேஷன் பவுண்டேசன் பொதுச் செயலாளர் தங்கராஜ், தலைவர் சிவன் கண்ணன், துணை தலைவர் ராதாகிருஷ்ணன், வருமானவரித்துறை இயக்குர் டி.என்.கர், தென் ஆப்ரிக்க தூதரக செயலாளர் நிகோலோ பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நடிகை ஷைலஜா குத்துவிளக்கேற்றினார்.