துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
தனது அழகிய-ஓவிய ஒளிப்பதிவால் ரசிகர்களை மயக்கியவர் ஒளிப்பதிவாளர் அசோக் குமார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 125 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். தேசிய விருது உள்ளிட்ட பல மாநில விருதுகளையும் பெற்றவர் உடல்நலக் குறைவால் தீபாவளியன்று மரணம் அடைந்தார். அவரது மறைவையொட்டி, அவர் ஒளிப்பதிவு செய்த ஜீன்ஸ் படத்தில் நடித்த நடிகர் பிரஷாந்த கூறியுள்ள இரங்கல் செய்தி இதோ...
ஒளிப்பதிவு மூலம் புரட்சி செய்தவர் அசோக்குமார். இன்டோரில் படம் எடுத்தவர்களை அவுட்டோரில் படமெடுக்க தூண்டியவர். மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற படங்களில் அவரது ஒளிப்பதிவு பேசப்பட்டதோடு இல்லாமல், வெளிப்புற படப்படிப்பின் மீது ஒரு ஆர்வத்தையும் தாண்டியது. அவர் ஒரு இன்ஸ்டியூட் என்றே சொல்லாம். அவர் வடமொழியை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் மொழிபடங்களில் தான் ஆர்வம் காட்டினார்.
ஜீன்ஸ் படத்தில் நான் இரண்டு ரோலில் நடித்த போதும், அந்த சிரமத்தை வெளிக்காட்டாமல் படம் பிடித்தார். உலக அதியங்கள் 7-யும் படம் பிடித்தபோது ஒரு சவாலாகவே எடுத்து கொண்டு மிகச்சிறப்பாக படம் பிடித்தார். அவ்வளவு பெரிய மனிதர், எங்களோடு மிக இயல்பாக பழகியது இப்போது வரை நான் நினைத்து பார்க்கிறேன். தமிழ் சினிமாவில் இனி வரும் காலத்தினர் அவரது படங்களை பார்த்தாலே போதும். கேமரா ஒர்க் பற்றி நாமே கற்றுக்கொள்ளலாம். அவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு பேர் இழப்பு என்று கூறியுள்ளார் நடிகர் பிரஷாந்த்.