டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் நடித்த 'கத்தி' படம் வெளியாவதற்கு முன்தினம் சத்யம் திரையரங்கில் வெடிகுண்டு வீசி கண்ணாடிக் கதவுகள் உடைந்த புகைப்படத்தை, இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியும், தன்னை ஒரு நகைச்சுவை நடிகர் என நினைத்துக் கொண்டிருப்பவருமான பிரேம்ஜி அமரன் அவருடைய டுவிட்டர் தளத்தில் வெளியிட்டிருந்தார். இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் டுவிட்டரிலேயே பிரேம்ஜி அமரனுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடைசியாக நானும் தளபதி படத்தை முதல் நாள் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால் , தீபாவளி தினத்தன்று அஜித்தின் பட்டப் பெயரான 'தல' என்பதையும் தீபாவளி என்பதையும் சேர்த்து வருடா வருடம் எங்களைப் போன்ற திருமணமாகாத இளைஞர்கள் 'தல தீபாவளி'யைக் கொண்டாட வைக்கும் தலைக்கு நன்றி. தல ரசிகர்களுக்கும், தீபாவளியைக் கொண்டாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கும் 'தல' தீபாவளி வாழ்த்துகள் என வாழ்த்துப் பதிவைப் போட்டிருந்தார்.
நேற்று, ஏ.ஆர்.முருகதாஸ், 'கத்தி' படத்தின் முதல் நாள் சாதனை வசூலைப் பற்றி டுவிட்டரில் ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதன் பின் விஜய்யின் எதிர்ப்பாளர்கள் சிலர் 'கத்தி டீம் வடை' என்ற பெயரில் 'ஹேஷ்டேக்' ஒன்றை உருவாக்கி அதில் 'கத்தி' வசூல் செய்தியை தாறுமாறாகக் கிண்டலடித்து டுவிட்டரில் டிரெண்டை ஏற்படுத்தினர். அப்போது பிரேம்ஜி அவருடைய பங்கிற்கு சில வடை புகைப்படங்களுடன், “மழை நேரத்தில் வடை சாப்பிடுவது உடம்புக்கு நல்லது, உங்களுக்கு சாதாரண வடை பிடிக்கவில்லை என்றால் சாம்பார் வடையோ அல்லது தயிர் வடையையோ சாப்பிடுங்கள்” என விஜய் ரசிகர்களை மேலும் வெறுப்பேற்றியிருந்தார்.
அதைத் தொடர்ந்து நேற்றும் விஜய் ரசிகர்கள் பிரேம்ஜி அமரனை கடுமையாகத் திட்டி வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தனர். பிரேம்ஜி அமரன் தேவையே இல்லாமல் அவருடைய பதிவுகளில் அஜித்தையும் தேவையில்லாமல் இணைத்து விடுவது அஜித்துக்குத் தெரியுமா...ரசிகர் மன்றமே வேண்டாம் என்று இருக்கும் அஜித்தின் பெயரை பிரேம்ஜி அமரன் போன்றவர்கள் கெடுத்து வருவதை அஜித் கண்டு கொண்டால் நல்லது என அஜித்தின் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.