'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
தான் சினிமாவில் பிசியாக இருந்த காலத்தில் மாதம் ஒரு முறை ரசிகர்களை சந்தித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து வந்தார் ரஜினி. ஆனால் பின்னர் அப்படி சந்திப்பதை நிறுத்திக் கொண்டார். இருப்பினும், அவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தபோது தமிழகமெங்கிலும் உள்ள ரஜினி ரசிகர்கள் அவர் பூரண குணமடைய பல பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தினர்.
இந்த சேதியை அறிந்து நெகிழ்ந்து போனார் ரஜினி. அதனால் தான் குணமடைந்து வீடு திரும்பியதும் ரசிகர்களை சந்திப்பதாக சொன்னார். அதையடுத்து சென்னையில் உள்ள ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர்களிடம் அன்பாக உரையாடிய ரஜினி, சில அட்வைஸ்களையும் வழங்கினார். அதன்பிறகு சந்திப்பதற்கான சூழ்நிலைகள் அமையவில்லை.
இந்த நிலையில், தீபாவளி தினத்தன்று ரஜினியை சந்திக்க ஏராளமான ரசிகர்கள் வெளியூர்களில் இருந்து சென்னை வந்து குவிந்து விட்டார்களாம். இதையடுத்து தனது வீட்டருகே ஒரு மேடையில் தோன்றினாராம். அப்போது ரசிகர்கள் தீபாவளி வாழ்த்து சொல்ல, ரஜினியும் அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொன்னாராம். சிறிது நேரம் அவர்களுடன் அன்பாக பேசி விட்டு பின்னர் விடைபெற்று சென்றாராம்.
மேலும், 2011ம் ஆண்டு ரசிகர்களை சந்தித்து உரையாடிய ரஜினி, இந்த வருடம் தனது பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி ரசிகர்களை மீண்டும் சந்திக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.