ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிங்கம், சிங்கம்-2, அஞ்சான் என்று அடிதடி படங்களாக நடித்து வந்த சூர்யா, தற்போது வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தில் ஆவி கதையில் நடிக்கிறார். சமீபகாலமாய் திகில் படங்கள் நிறைய வந்து கொண்டிருப்பதால், ரசிகர்களின் ரசனை திகில் படங்கள் பக்கம் போய் விட்டதாக கருதி, அதே ரூட்டில் சூர்யாவும் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு, அப்படத்தின் கதையும் தற்போது வெளியில் கசிந்துள்ளது.
அதாவது, கிருஷ்ணா நடிப்பில் வெளியான யாமிருக்க பயமேன் என்ற படத்தில் இறந்தவர்களெல்லாம் மீண்டும் மனிதர்களாக நடமாடுவார்கள். எல்லோர் கண்களுக்கும் தெரிவார்கள். ஆனால் இந்த மாஸ் படத்தில் இறந்து போன சில ஆன்மாக்கள் சூர்யாவின் கண்களுக்கு மட்டுமே தெரிவார்களாம். அதாவது கல்யாணராமன் படத்தில் இறந்து போன கமல், இன்னொரு கமலின் கண்களுக்கு மட்டுமே தெரிவாரே அதேபோன்றுதானாம்.
மேலும், முதலில் யாரோ சிலர் தன்னை எங்கு சென்றாலும் பின்தொடர்வதை கண்டு டென்சனாகும் சூர்யாவுக்கு, அவர்கள் மற்றவர்களின் கண்களுக்கு தெரியாதபோதுதான், அவர்கள் ஆவிகள் என்பதை உணர்கிறாராம். அதையடுத்து, எதற்காக என்னையே தொடர்ந்து வருகிறீர்கள்? என்று ஆவிகளிடம் சூர்யா கேட்கும்போதுதான், தங்களுக்கு ஏற்பட்டுள்ள சில பிரச்சினையை சூர்யாவிடம் சொல்லி, அதை நிவர்த்தி பண்ணுமாறு கூறுகிறார்களாம். அதையடுத்து அவர்கள் ஒவ்வொருவரின் பிரச்சினைகளையும் சூர்யா எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் மாஸ் படத்தின் கதையாம்.
ஆக, இதுவரை நடித்த பல படங்களில் மனிதர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்து வந்த சிங்கம் சூர்யா, இப்போது ஆவிகளின் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க களமிறங்கி நிற்கிறார். அது என்ன பிரச்சினை? அதை எப்படி தீர்த்து வைக்கிறார்? என்பது படம் திரைக்கு வரும்போதுதான் தெரியும்.