மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
தீபாவளிக்கு முந்தின நாள் வரை விஜய் நடித்துள்ள கத்தி படம் திரைக்கு வருமா? வராதா? என்பதே பெருத்த கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் ஒருவழியாக எதிர்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லைகா பெயரை நீக்கி கத்தியை வெளியிட்டுள்ளனர். திரையிட்ட எல்லா சென்டர்களிலும் ரசிகர் கூட்டம் அலைமோதிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு, விஜய் நடித்த படங்களில் நல்ல கதையம்சம் உள்ள படம் என்ற பெயரும் ரசிகர்களின் கருத்தாகி விட்டதால், எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் கத்தி ஓடும் என்கிற கருத்துக்களும் நிலவி வருகிறது. இந்த நிலையில் பாக்ஸ் ஆபீசில் கத்தியின் வசூல் கன்னாபின்னாவென்று எகிறிக்கொண்டிருப்பதாகவும் பரபரப்பு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இதுபற்றி அப்பட டைரக்டர் முருகதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,
தீபாவளி அன்று வெளியான கத்தி படம் உலகம் முழுவதிலும் ஒரே நாளில் 23 கோடியே 80 லட்சத்தை வசூலித்ததாக தெரிவித்துள்ளார். அதாவது இந்தியாவில் 16 கோடியே 45 லட்சமும், வெளிநாடுகளில் 7 கோடியே 35 லட்சமும் வசூலானதாகவும் கூறுகிறார். அநத வகையில், தென்னிந்திய அளவில் இதுவரை எந்த படங்களும் இந்த அளவுக்கு முதல்நாளில் வசூலித்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுவரை தமிழில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிகம் வசூலித்த பட பட்டியலில் ரஜினியின் எந்திரன்தான் முதலிடத்தில் இருந்தது. அதையடுத்து, அஜீத்தின் ஆரம்பம் இடம்பிடித்திருந்தது. ஆனால் இப்போது அந்த இரண்டு படங்களையும் பின்தள்ளிவிட்டு முதலிடத்துக்கு சென்றிருக்கிறது விஜய்யின் கத்தி.