ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் |
அப்பாவின் மறைவை திரைபிரபலங்கள் யாரும் கண்டுகொள்ளாதது மனதிற்கு வருத்தம் அளிப்பதாக ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் ஆகாஷ் கூறியுள்ளார். ஒரு காலத்தில் தன் ஒளிப்பதிவால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் அசோக்குமார்(70). இயக்குனர் மகேந்திரனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர். ஜானி, கை கொடுக்கும் கை, காளி, மன்னன், வெற்றி விழா, சூரியன், உல்லாசப் பறவைகள், ஜீன்ஸ் உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில், 125 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் அசோக்குமார். அவர், காமாக்னி, அன்று பெய்த மழை படங்களையும் இயக்கியுள்ளார்.
கடந்த 6 மாத காலமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில், தீபாவளி தினத்தன்று(அக்., 22ம் தேதி) அவர் மரணம் அடைந்தார். இந்நிலையில் அவரது இறுதிசடங்கில் ஒருசில திரைபிரபலங்களை தவிர யாரும் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து மனவருத்தப்பட்டு இருக்கிறார் அசோக்குமாரின் மகன் ஆகாஷ்.
அவர் கூறியுள்ளதாவது, அப்பா புகழின் உச்சத்தில் இருந்தபோது அவரை காண இயக்குநர்கள், நடிகர்கள் என பலரும் வருவார்கள், ஆனால் அவர் சினிமாவை விட்டு விலகிய பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. கடைசியில் அவர் இறந்தபோது அவரை காண பெரும்பாலபான திரைநட்சத்திரங்கள் யாரும் வரவில்லை, ஒருசிலர் மட்டுமே வந்தனர். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நாம் எல்லோரும் எந்த மாதிரியான உலகத்தில் இருக்கிறோம் என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.