'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் நளினி தலைமையிலான அணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஜெயிலிலிருந்து ஜாமீனில் வந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பிரார்த்தனை செய்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக மக்களின் நலன் காக்கும் மக்களின் முதல்வர் சோதனைகளை கடந்து தமிழகம் திரும்பியிருப்பது சின்னத்திரை கலைஞர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவர் அனைத்து தடைகளையும் வென்றெடுத்து, மீண்டும் தமிழக முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமர்வது திண்ணம். பெற்ற தாய்க்கு மேலாக, தன்னை நாடி வரும் கோடான கோடி தமிழ் இதயங்களின் தேவைகளை கொடுத்து தமிழ் மக்களின் துயரங்களை துடைக்க உழைக்கும் மக்கள் முதல்வரின் கசந்த காதம் வசந்த காலமாக மாற சின்னத்திரை நடிகர் சங்கம் பிரார்த்திக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.