கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
ராம்லீலா படத்திற்கு பிறகு, சஞ்சய் லீலா பன்சாலி, மீண்டும் ரன்வீர் சிங்கை வைத்து ''பஜிராவ் மஸ்தானி'' என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்தப்படத்திற்காக ரன்வீர் சிங் குர்கானுக்கு குடிபெயர இருக்கிறார். இதுப்பற்றி விசாரித்ததில், சமீபத்தில் அவர் இந்தப்படத்திற்காக மொட்டை அடித்து இருப்பது போன்ற தோற்றம் வெளியாகின. இதனால் இப்படத்தில் ரன்வீர் சிங் எந்தமாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது ரன்வீர் சிங்கின் தோற்றம் வெளியானதால் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி அதிர்ச்சிக்கு உள்ளானார். இதனால் இனியும் இதுபோன்று நடக்காமல் இருக்கவும், படம்பற்றிய விஷயங்கள் வெளியே தெரியாமல் இருக்கவும் குர்கானில் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பை தனியாக வாடகைக்கு பிடித்துள்ளார் இயக்குநர். இனி ரன்வீர் சிங் தொடர்ந்து அந்த அடுக்குமாடி குடியிருப்பிலேயே படம் முடியும் வரை இருப்பார் என படக்குழு தெரிவிக்கிறது.