கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ''வருத்தப்படாத வாலிபர் சங்கம்''. இப்படம் தெலுங்கில் கரண்ட் தீகா என்ற பெயரில் ரீ-மேக்காகிறது. இதில், மஞ்சு மனோஜ் ஹீரோவாகவும், ராகுல் ப்ரீத்தி சிங் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். தமிழில் கல்யாணி டீச்சர் வேடமான பிந்து மாதவி ரோலில், பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். சன்னிக்கு தெலுங்கில் இதுதான் முதல்படம். இப்படத்தில் இவர் வந்து போவது குறைந்த காட்சிகள் என்றாலும், இவருக்கு முக்கால் கோடி சம்பளமாக கொடுத்துள்ளனர். மேலும் இப்படத்தில், சன்னிக்கு ஒரு பாடல் காட்சியும் உள்ளது. அதனால் இவருக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குநரான நாகேஸ்வர் ரெட்டி சன்னி லியோனை புகழ்ந்து தள்ளியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, சன்னி லியோன் தனது சினிமா தொழிலில் மிகவும் பக்தியுடையவர், அதைவிட முக்கியம் அவர் நேரம் தவறாத பங்சுவாலிட்டியான நடிகை. படப்பிடிப்புக்கு சொன்ன நேரத்தில் சரியாக வந்துவிடுவார். சினிமாவில் அவர் காட்டும் பக்தி மற்றும் ஈடுபாடு எங்களை ஆச்சர்யப்படுத்தியது என்று கூறியுள்ளார்.