அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது |
கமலுடன் நடித்துள்ள விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் படங்கள் வந்தால் நான் பெரிய அளவில் பேசப்படுவேன் என்று பக்கம் பக்கமாக ஆண்ட்ரியா பேட்டி கொடுத்ததுதான் மிச்சம். ஆனால் அந்த படங்கள் இன்னமும் திரைக்குவரவில்லை. ஆனால் அதற்குள்ளாக சுந்தர்.சியின் அரண்மனை படம் ஆண்ட்ரியாவை பேச வைத்து விட்டது.
இத்தனைக்கும் அரண்மனை படத்தில் ஹன்சிகா இருப்பதால் தனது கேரக்டர் பெரிதாக பேசப்படாது என்றுதான் நினைத்திருந்தாராம் ஆண்ட்ரியா. ஆனால் எல்லாம் அவர் நினைத்ததற்கு மாறாக நடந்து விட்டது. இந்த படத்தில்தான் ஆண்ட்ரியா சிறப்பாக நடித்திருக்கிறார் என்று ஆளாலுக்கு புகழாரம் சூட்டி விட்டனர். அதோடு, அந்த படத்தில் நடித்த பிறகுதான் இப்போது வலியவன் பட வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளதாம்.
இந்த நிலையில், விஷால் நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் ஆம்பள படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் ஆண்ட்ரியா. இதற்கு முன்பே எத்தனையோ டைரக்டர்கள் குத்தாட்டமாட தன்னை துரத்தியபோதும் நழுவிக்கொண்டு வந்த ஆண்ட்ரியா, சுந்தர்.சி அபிமானத்திற்குரிய டைரக்டராகி விட்டதால் அவரது வார்த்தையை தட்ட முடியாமல் சம்மதம் சொன்னாராம். ஆனால் அதற்கு இன்னொரு காரணமும் உள்ளதாம்.
விஷாலுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்டகாலமாக ஆண்ட்ரியாவுக்கு இருந்து வந்ததாம். அவர் எடுத்து வந்த முயற்சிகள் எதுவும் கைகூடவில்லையாம். அதனால்தான் குத்தாட்டம் மூலமாவது விஷாலை நெருங்குவோம் என்பதற்காக மறுயோசனை இன்றி உடனே ஓ.கே சொன்னாராம் ஆண்ட்ரியா. ஆக, ஆண்ட்ரியாவின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார் சுந்தர்.சி.,