டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட்டில் இலியானா மார்க்கெட் எகிறி நிற்பதால், படத்துக்குப் படம் தன் படக்கூலியை உயர்த்தி வருவதாக, அவரைப்பற்றி பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால்,இந்த செய்தியை அதிரடியாக மறுத்துள்ளார் இலியானா. 'நான் ஒன்றும் பணத்தின் அருமை தெரியாதவள் அல்ல. சின்ன பெண்ணாக இருந்தபோது, மும்பையில் வாடகை வீட்டில் தான் வசித்தேன்.அதன்பின், கோவா சென்று கஷ்டப்பட்டு, ஒரு வீடு கட்டினார் என் தந்தை. கொத்தனாருக்கு கூட பணம் கொடுக்க முடியாமல், நாங்களே மண் சுமந்து, அந்த வீட்டின் பூச்சு வேலைகளை செய்தோம். அப்போதெல்லாம், நான் மண் தரையில் தான் துாங்குவேன்.இப்படி கஷ்டப்பட்டு வளர்ந்த எனக்கு, தயாரிப்பாளரின் கஷ்டங்களைஉணர முடியும். அதனால், எந்த பட தயாரிப்பாளர்களையும், நான் கஷ்டப்படுத்துவதில்லை' என்கிறார்.