பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிவகார்த்திகேயன் நடித்து வரும் காக்கிச்சட்டை படம் தீபவாவளிக்கு ரிலீஸ் ஆகியிருந்தால் கூட இத்தனை சந்தோஷப்பட்டிருப்பாரா என்று தெரியாது. ஆனால் படு விமரிசையாக இந்த வருட தீபாவளியைக் கொண்டாடி உள்ளார் சிவகார்த்திகேயன். இந்த வருட தீபாவளி சிவகார்த்திகேயனுக்கு ரொம்பவே ஸ்பெஷலாக அமைந்துவிட்டது. அதாவது, அவருடைய செல்ல மகள் ஆராதனாவுக்கு அக்டோபர் 22 தீபாவளி அன்றுதான் முதல் பிறந்தநாள்.
ஆகவே இந்த வருட தீபாவளியை டூ இன் ஒன்னாக அதாவது இரண்டு விழாக்களையும் சேர்த்து வைத்துக் கொண்டாடி உள்ளது சிவகார்த்திகேயனின் குடும்பம். காலையில் தீபாவளி கொண்டாட்டம், மாலையில் ஆராதனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என திருச்சியில் இருக்கும் தனது அம்மா, அக்கா குடும்பங்களுடன் தீபாவளியை கொண்டாடினாராம் சிவகார்த்திகேயன்.
அவர் பற்றி மற்றொரு தகவல்...காக்கிச்சட்டை படத்தில் க்ரைம் பிராஞ்ச் ஆபிஸர் வேடத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். நிஜத்தில் சிவகார்த்திகேயனின் அப்பா திருச்சியில் போலீஸ் எஸ்.பி.யாக இருந்து காலமானவர். எனவேதான் காக்கிச்சட்டை படத்தில் போலீஸ்அதிகாரி வேடத்தை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டாராம்.