பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்-ராதாவை பாரதிராஜா அறிமுகம் செய்தது போல், நான் அவர்களின் வாரிசுகளை அறிமுகம் செய்கிறேன் என்று சொலலிக்கொண்டு, கடல் படத்தில் கார்த்திக்கின் மகன் கெளதமையும், ராதாவின் மகள் துளசி நாயரையும் அறிமுகம் செய்தவர் மணிரத்னம்.அதனால் அந்த படத்திற்கும் அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு இணையான எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் மணிரத்னம் ரசித்து எடுத்த அந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் படம் தோல்வியடைந்து இந்த படத்திற்கு பிறகு கோடம்பாக்கமே தங்களை தத்தெடுத்துக்கொள்ளும் என்ற கனவில் மிதந்து கொண்டிருந்த கெளதம்-துளசி இருவருக்குமே அப்படம் பலத்த ஏமாற்றத்தை கொடுத்தது.
இருப்பினும், அதற்கடுத்து கெளதமுக்கு அடுத்தடுத்து படங்கள் புக்காகி விட்டது. என்றாலும், துளசி நாயரைத்தான் கண்டுகொள்வாரில்லை. அதற்கு காரணம் அவரது பெருத்த உடல்கட்டுதான். ஆனபோதும், ரவி கே.சந்திரன் தனது யான் படத்துக்கு கதாநாயகி தேடியபோது, ஒருநாள் மணிரத்னம்தான் அவரது பெயரை பரிந்துரை செய்தாராம். சின்ன பெண்தான். ஆனால் நல்ல புரிதல் உள்ளது. எத்தனை சவாலான வேடத்தையும் எளிதாக செய்து விடுவாள் என்று சர்டிபிகேட் கொடுத்தாராம்.
அதனால்தான் ஜீவாவுக்கு ஜோடியாக யான் படத்திற்கு துளசி நாயரை புக் பண்ணினாராம் ரவி கே.சந்திரன். ஆனால், இந்த படமும் துளசிக்கு ஹிட்டாக அமையவில்லை. அதனால் அடுத்து என்ன செய்வது எனறு தடுமாறிப்போய் நின்ற துளசி நாயர், மணிரத்னம் துல்கர் சல்மானை வைத்து படம் இயக்குகிறார் என்று கேள்விப்பட்டு மீண்டும் சான்ஸ் கேட்டாராம். ஆனால், மணிரத்னம் செண்டிமென்ட் பார்க்கக்கூடியவரல்ல என்றபோதும், துளசி நடித்த முதல் இரண்டு படங்களுமே தோல்வி என்பதால், மீண்டும் அவரை வைத்து படம் இயக்கி அந்த தோல்வி தன்னை தொடர்ந்து விடக்கூடாது என்பதற்காக, என் படத்தின் கதாபாத்திரத்ற்கு நீ பொருந்த மாட்டாய். அதனால் இன்னொரு சந்தர்ப்பத்தில் சான்ஸ் தருகிறேன் என்று கைவிரித்து விட்டாராம்.
இதனால் நொந்துபோன துளசி நாயர், இப்போது யாராவது டைரக்டர்கள் வருகிறார்களா? என்று வழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறார் .