கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
தன்னுடன் எந்த நடிகை நடித்தாலும் அவர்களுடன் உயிர்த்தோழராகி விடுவார் ஜெயம்ரவி என்கிறார்கள். அதிலும் நயன்தாராதான் அவரது நீண்டகால கனவு கன்னி. அதனால் அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று நினைத்திருந்தவருக்கு இப்போது தனி ஒருவன் படத்தில் அந்தவாய்ப்பு கிடைத்திருப்பதால் செம குஷியில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
ஆனால் இதைப்பற்றி ஜெயம்ரவியைக் கேட்டால், நயன்தாரா நல்ல நடிகை. அவரது நடிப்பை நான் ரசித்திருக்கிறேன். மற்றபடி அவருடன் குஷியுடன் நடிக்கிறேன் என்று சொல்ல முடியாது. காரணம், அவர் நல்ல பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்ட். அதனால் அவருடன் போட்டி போட்டுத்தான் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
மற்றபடி நான் என்னுடன் நடிக்கும் அனைத்து நடிகைகளுடனும் உயிர்த்தோழராகி விடுவேன் என்று சொல்வதும் தவறு. என்னைப்பொறுத்தவரை எல்லோரிடமும் இயல்பாக பழகுவேன். மற்றபடி அந்தந்த படங்களில நடித்து முடித்தும் அவர்கள் யாரோ நான் யாரோ என்றாகி விடுவோம். ஆனால் ஜெனிலியா மட்டும்தான் எனது பெஸ்ட் ப்ரண்ட்.
அவருடன் சந்தோஷ் சுப்பிரமணியன் படத்தில் நடித்தபோது நல்ல தோழியாகி விட்டார். இப்போதும் அடிக்கடி போன் செய்து நலம் விசாரிப்பார். அந்த வகையில் எனது குடும்ப நண்பர் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய பெருமைக்குரிய நடிகை ஜெனிலியா என்கிறார் ஜெயம்ரவி.