கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
நடிகை த்ரிஷா செல்ல பிராணிகள் வளர்ப்பதிலும், அதிலும் குறிப்பாக தெரு நாய்களை வளர்ப்பதிலும், பாதுகாப்பதிலும் அக்கறை உள்ளவர் என்பது அனைவருக்கும் தெரியும். செல்ல நாய்களுக்காக அவர் தீபாவளிக்கு பட்டாசுகூட வெடிப்பதில்லையாம். அவர் கூறியிருப்பதாவது: பொதுவாகவே தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது எனக்கு பிடிக்காது. அதுக்கு காரணம் பட்டாசால் காற்று மாசும், ஒலி மாசும் உண்டாகும். அதோடு என் செல்ல நாய்குட்டிகள் பட்டாசுக்கு பயப்படும். மனிதர்களை விட நாய்களுக்கு செவித் திறன் அதிகம். பட்டாசு சத்தம் நம்மை விட பல மடங்கு சத்தமாக நாய்களுக்கு கேட்கும். பண்டிகை என்பது மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
தீபாவளியன்று வீட்டுக்குள்ளேதான் இருப்பேன். செல்ல நாய்களுடன் விளையாடிக் கொண்டிருப்பேன். மாலையில் பட்டாசு சத்தம் குறைந்ததும் தோழிகள் வீட்டுக்கு கிளம்பி போய்விடுவேன். என்கிறார் த்ரிஷா.