டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமாவில் மற்றவர்களை நக்கல் செய்வது,கலாய்ப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ள பிரேம்ஜி, டுவிட்டரிலும் அதே ரூட்டைத்தான் பின்பற்றி வருகிறார். யாரைப்பற்றியும், எதைப்பற்றியும யோசிக்காமல் நறுக் கமெண்ட் கொடுத்து வருகிறார். அதிலும், அஞ்சான் பட டைரக்டர் லிங்குசாமி, எங்கிட்ட உள்ள மொத்த வித்தைகளையும் இந்த படத்தில் காட்டுறேன் என்று சொன்ன கமெண்டுக்கு ஏற்கனவே இணையதளங்ளில் சூர்யாவின் ரசிகர்கள் அவரை செம காட்டு காட்டி விட்டனர்.
இதற்கிடையே பிரேம்ஜியும் தான் நடித்து வரும் ஒரு படத்தில, அதே டயலாக்கை பஞ்ச் டயலாக் போன்று பேசி நடித்துள்ளாராம். அது லிங்குசாமியை கிண்டல் செய்வது போலவே அமைந்துள்ளதாம். இந்தநிலையில், விஜய்யின் கத்தி பட சர்ச்சையிலும் பிரேம்ஜி சிக்கியிருக்கிறார். அதாவது, ஏற்கனவே கத்தி படத்துக்கு மிரட்டல் இருந்ததால் படம் ரிலீஸ் ஆகுமோ? ஆகாதோ ? என்று அவரது ரசிகர்கள் கொதித்துப்போய் இருந்து வந்தனர்.
இந்த நேரத்தில், சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை தனது டுவிட்டரில் , ரீடுவீட் செய்திருந்தாராம் பிரேம்ஜி. ஆனால் அவர் செய்த இந்த டுவீட்டினால் விஜய் ரசிகர்கள் செம டென்சனாகி விட்டார்களாம். அதனால் ஆளாலுக்கு பிரேம்ஜியின் வலைதளத்திற்கு சென்று அவரை ஒரு காட்டு காட்டி விட்டார்களாம்.
இதையடுத்து, இப்படியே போனால் நம்மை ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்று யோசித்த பிரேம்ஜி, நானும் உங்களை மாதிரியே தளபதி ரசிகன்தான். கத்தி படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஆவலோடு இருக்கேன் என்று சிம்பு பாணியில் எடுத்து விட்டாராம். ஆனபோதும் ரசிகர்கள் அடங்கவில்லையாம். பிரேம்ஜியை மீண்டும் மீண்டும் டுவிட் மூலம் வசை பாடிக்காண்டேயிருந்தார்களாம். அதனால் இந்த வம்பே வேண்டாமென்று தற்காலிகமாக டுவிட்டில் இருந்து ஜகா வாங்கி விட்டாராம் பிரேம்ஜி.