ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் |
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கிவிட்டது. மதுரை, சேலம், வேலூர் பகுதிகள் நீங்கலாக தமிழ்நாடு முழவதும் கடந்த 5 நாட்களாக அடை மழை பெய்து வருகிறது. மக்கள் தீபாவளிக்கு புது துணி, பட்டாசு வாங்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் எப்படி தியேட்டருக்குச் செல்வார்கள்.
அதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்கள் கடந்த 5 நாட்களாக காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக பல தியேட்டர்களில் இரவுக் காட்சியை ரத்து செய்து விட்டார்கள். ஓரளவுக்கு நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருந்த ஜீவா, மெட்ராஸ், அரண்மணை படங்களின் வசூல்கள் கணிசகமாக குறைந்து விட்டது. தீபாவளிக்கு பிறகு தீபாவளி படங்கள் பக்கம் மக்கள் சென்று விடுவார்கள். இதனால் இந்தப் படங்கள் ஒரு சில தியேட்டர்களிலேயே ஓடிக் கொண்டிருக்கும்.
தீபாளிக்கு பிறகும் அடைமழை நீடித்தால் தீபாவளி படங்களின் வசூலும் கடுமையாக பாதிக்கப்படும். என்ன மழை பெய்தாலும் இளைஞர்கள் தியேட்டருக்கு வந்து விடுவார்கள். ஆனால் பேமிலி ஆடியன்ஸ் வருவது குறைந்து விடும். இதனால் தீபாவளிக்கு பிறகு மழை குறைந்து தியேட்டர்கள் கலகலப்பாகுமா? என்று கவலையோடு கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் தீபாவளி பட தயாரிப்பாளர்கள்.