தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கிவிட்டது. மதுரை, சேலம், வேலூர் பகுதிகள் நீங்கலாக தமிழ்நாடு முழவதும் கடந்த 5 நாட்களாக அடை மழை பெய்து வருகிறது. மக்கள் தீபாவளிக்கு புது துணி, பட்டாசு வாங்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் எப்படி தியேட்டருக்குச் செல்வார்கள்.
அதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்கள் கடந்த 5 நாட்களாக காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக பல தியேட்டர்களில் இரவுக் காட்சியை ரத்து செய்து விட்டார்கள். ஓரளவுக்கு நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருந்த ஜீவா, மெட்ராஸ், அரண்மணை படங்களின் வசூல்கள் கணிசகமாக குறைந்து விட்டது. தீபாவளிக்கு பிறகு தீபாவளி படங்கள் பக்கம் மக்கள் சென்று விடுவார்கள். இதனால் இந்தப் படங்கள் ஒரு சில தியேட்டர்களிலேயே ஓடிக் கொண்டிருக்கும்.
தீபாளிக்கு பிறகும் அடைமழை நீடித்தால் தீபாவளி படங்களின் வசூலும் கடுமையாக பாதிக்கப்படும். என்ன மழை பெய்தாலும் இளைஞர்கள் தியேட்டருக்கு வந்து விடுவார்கள். ஆனால் பேமிலி ஆடியன்ஸ் வருவது குறைந்து விடும். இதனால் தீபாவளிக்கு பிறகு மழை குறைந்து தியேட்டர்கள் கலகலப்பாகுமா? என்று கவலையோடு கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் தீபாவளி பட தயாரிப்பாளர்கள்.