ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தீபாவளி அன்று ரிலீசாகும் படத்தை அன்றே பார்ப்பது என்பது இளைஞர்களுக்கு அலாதி இன்பம். இதனால் தியேட்டர்கள் முன் காலையிலேயே குவிந்து விடுவார்கள். அதிலும் அபிமான நட்சத்திரங்கள் நடித்த படம் வெளிவந்தால் கட்டவுட்டுக்கு மாலை, பாலாபிஷேகம் என்ற களைகட்டும்.
அவர்களின் இந்த ஆர்வத்தை பயன்படுத்திக் கொண்டு சென்னையில் 120 ரூபாய் டிக்கெட்டை 500 ரூபாய் வரைக்கும் விற்பார்கள். வெளியூர்களில் 50 ரூபாய் டிக்கெட்டை 300 ரூபாய் வரை விற்பார்கள். இதை எதிர்த்து திருச்சியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உயர்நீதி மன்றம் அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்கள், மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
"அரசு நிர்ணயித்த கட்டணத்தையே தியேட்டர்களில் வசூலிக்க வேண்டும், கூடுதலாக வசூலிக்க கூடாது. இதுகுறித்து அந்ததந்த மாவட்ட கலெக்டர்களும், போலீஸ் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.