தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் கத்தி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. கத்தி, நாளை(அக்., 22ம் தேதி) தீபாவளியன்று வெளியாகிறது. லைகா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்ஷே உடன் மிகவும் நெருக்கமானவர் என்றும், அவரது பினாமியாக இப்படத்தை சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்து இருப்பதாகவும் கூறி தமிழகத்தில் இப்படத்தை திரையிட விட மாட்டோம் என தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பு தரப்பினருடன், தமிழ் அமைப்புகள் சார்பில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டு திட்டமிட்டபடி நாளை கத்தி படத்தை திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் நேற்று திடீரென மர்மநபர்கள் சிலர் சென்னையில் உள்ள தியேட்டர்களை தாக்கிவிட்டு, பெட்ரோல் குண்டுகளையும் வீசிவிட்டு சென்றனர். இதனால் கத்தி படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் உருவானது.
விஜய் அறிக்கை
இந்த சூழலில், கத்தி படத்தின் ஹீரோவான விஜய், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், சில நாட்களாக தமிழ் அமைப்புகள், கத்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களில் நீக்க கோரிக்கை வைத்தனர். அவர்களின் வேண்டுகோளை மதித்து படத்தின் விளம்பரங்களில் லைக்கா பெயரை நீக்க தயாரிப்பாளர் ஒத்துக்கொண்டனர். எனவே இந்த பிரச்னை சுமூகமாக முடிந்துவிட்டது. எனவே எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களும், மக்களும், கத்தி திரைப்படத்தை சந்தோஷமாக கண்டுகளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
கத்தி திரைப்படம் சுமூகமாக வெளிவர எங்களுக்கு ஆதரவு தந்த ஜெயலலிதாவுக்கும், தமிழக காவல் துறைக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், தமிழக அமைப்புகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து லைக்கா பெயரை நீக்கிய தயாரிப்பாளருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அனைவருக்கு எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் விஜய்.
ஜெ.,வுக்கு நன்றி:
இதனிடையேநடிகர் விஜய் ஜெ.,வுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கத்தி திரøப்பமம் சுமூகமாக வெளிவர ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், தயாரிப்பு நிறுவன பெயரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாகவும், தயாரிப்பு நிறுவன பெயரைநீக்க கோரிய தமிழ் அமைப்புகளின் கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
திட்டமிட்டபடி படம் வெளியாகும் - அபிராமி ராமநாதன்
கத்தி படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகும் என அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். கத்தி படம் தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அபிராமி ராமநாதன் கூறினார். மேலும் தமிழ் அமைப்புகளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.