ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களே எந்தவித தயக்கமும் இன்றி அயிட்டம் பாடல்களில் நடனமாடுவார்கள். ஆனால் அனுஷ்கா சர்மா மட்டும் இதுவரை பல வாய்ப்புகள் தேடிச்சென்றபோதும் அதை ஏற்கவில்லை. காரணம், அயிட்டம் பாடல் என்கிறபோது அதிக ஆடைகுறைப்பு செய்யச்சொல்வார்கள் என்பதால் அந்த வாய்ப்புகளை கட்டாயமாக தவிர்த்து வந்தார்.
ஆனால், இப்போது ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா நடிக்கும் தில் தடக்னே டு என்ற படத்தில் முதன்முறையாக ஒரு அயிட்டம் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். காரணம், இந்த படத்தை இயக்குவது ஜோயா அக்தர் என்ற பெண் இயக்குனராம். அவரது படங்களில் ஆபாசத்துக்கு எப்போதுமே தடைதானாம். அதனால்தான் தன்னை அளவுக்கதிகமாக தோலுரிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் நடித்தாராம் அனுஷ்கா சர்மா.
அவரது நம்பிக்கையை வீணடிக்காத வகையில், ஜோயா அக்தரும் அவரை பக்கா டீசன்டாகவே உடையணிய வைத்து ஆட வைத்திருக்கிறாராம். மேலும், அதே பாடலில் படத்தின் ஹீரோ ரன்வீர்சிங், ஹீரோயின் பிரியங்கா சோப்ரா ஆகியோரும்கூட அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து நடனமாடியிருக்கிறார்களாம். இந்த வாய்ப்பினை பெருமையாக கருதும் அனுஷ்கா சர்மா, இந்த தில் தடக்னே டு என திரையுலக வாழ்வில் ஒரு முக்கியமான படமாகி விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.