பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
முதல்வர் கருணாநிதி எழுதிய பொன்னர் சங்கர் படம் தற்போது திரைப்படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் நடிகர் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கிறார். தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் துவக்க விழா அழைப்பிதழை சிறப்பாக வடிவமைத்திருப்பதற்காக ஆசியன் பிரிட்டர் ஆப் தி இயர் என்னும் வெள்ளி விருது இப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தின் துவக்க விழா பூஜையன்று தைபை 2010 நிறுவனம் இவ்விருதினை வழங்கி கவுரவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க நிறுவனமான சப்பி நிறுவனம் இவ்விருதினை வழங்கி உள்ளது. உலக திரைப்பட அரங்கில் படத்தின் துவக்க விழா அழைப்பிதழுக்கு இது போன்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னர் சங்கருக்கு கிடைத்த விருதுடன் டைரக்டர் தியாகராஜன், நடிகர் பிரசாந்த் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.