சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
'முகமூடி' என்ற ஒரு படத்தை இயக்கியதையே மறக்க வேண்டும் என்றுதான் அந்தப் படத்தை இயக்கிய மிஷ்கினே நினைத்திருப்பார். அந்தப் படத்தில் சூர்யாதான் முதலில் நடிப்பதாக இருந்தது, அவர் மறுத்த கதையில்தான் ஜீவா நடித்தார். நல்ல வேளை அந்தப் படத்தில் நடிக்காமல் இருந்தோமே என சூர்யா அந்த அளவிற்கு மகிழ்ந்திருப்பார். 'முகமூடி' படத்தில் நாயகியாக அறிமுகமானவர்தான் பூஜா ஹெக்டே. நல்ல உயரத்துடனும், அழகாகவும் இருந்த நாயகியான இவருக்கு படத்தின் தோல்வி, அதன் பின் தமிழில் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கூட ஏற்படுத்திக் கொடுக்காமல் போய்விட்டது.
இருந்தாலும் மனம் தளராத பூஜா மற்ற மொழிகளில் நடிப்பதில் கவனம் செலுத்தினார். அவர் தெலுங்கில் நாயகியாக நடித்துள்ள 'ஒக லைலா கோசம்' படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. இந்தப் படத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ளார். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதாம். அதோடு, அவர் நடித்துள்ள மற்றொரு தெலுங்குப் படமான 'முகுந்தா' படமும் விரைவில் வெளியாக உள்ளது. இந்த தெலுங்குப் படங்களைத் தவிர ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக, அஷுதோஷ் கௌரிகர் இயக்க உள்ள 'மொகஞ்சதாரோ' ஹிந்திப் படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
2010ல் மிஸ் இந்தியா ரன்னர்-அப்,ஆக தேர்வான பூஜா ஹெக்டேவை, தமிழ்த் திரையுலகம் ஒதுக்கினாலும், தெலுங்கிலும், ஹிந்தியிலும் விரைவில் புகழ் பெற்று விடுவார் என்கிறார்கள். தமிழில் வாய்ப்பு மறுக்கப்படும் நடிகைகள் மற்ற மொழிகளில் புகழின் உச்சிக்குச் செல்வது பல காலமாகவே நடந்து வருகிறது. அது பூஜாவிற்கும் தொடர்கிறது.