இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அளித்ததையடுத்து வெளியே வந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, நடிகர் ரஜினி நேற்று வாழ்த்து அனுப்பி இருந்தார். அதில், ஜெயலலிதா ஆரோக்யத்துடனும் நலமுடனும் இருக்கவும் வாழ்த்து தெரிவித்த ரஜினி, தீபாவளி வாழ்த்தும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று (அக்டோபர் 20) ரஜினிக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிடுகையில், உங்களின் அன்புக்கும் கருணை உணர்விற்கும் எனது நன்றி. அவர் நல்ல ஆரோக்யம், மகிழ்ச்சி மற்றும் செயல்கள் அனைத்திலும் வெற்றியுடன் நீண்டகாலம் வாழ்வதற்காக நானும் இறைவனை பிராத்திக்கிறேன். எனது வாழ்த்துக்களை உங்களின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.