தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கவியரசர் கண்ணதாசன்-எம்.எஸ்.விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பில் கவியரசர் கண்ணதாசனின் 11ம் ஆண்டு விழா குமார ராஜா முத்தையா அரங்கில் நடந்தது. விழாவை குமாரராணி மீனா முத்தையா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இலக்கிய சிந்தனை ப.லட்சுமணன் தலைமை தாங்கி கவிஞர்கள் அரு.நாகப்பன், கயல் தினகரன் ஆகியோருக்கு கவியரசர் விருது வழங்கினார்.
விருது பெற்றவர்களை பாராட்டி இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேசினார். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கவியரசரின் பாடல்களும், எனது பாமாலைகளும் என்ற தலைப்பில் பேசினார். பின்னர் கவியரசரின் பாடல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். அறக்கட்டளை தலைவர் எம்.எஸ்.விஸ்வநாதன் வரவேற்றார். முடிவில் ஏ.நாகப்பன் நன்றி கூறினார். விழாவில் அறக்கட்டளை செயலாளர் ஏவிஎம்.சரவணன், நல்லி குப்புசாமி, முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.