தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பூஜை, கத்தி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே தீபாவளிக்கு வருவதாக சொல்லப்பட்டநிலையில், சில நாட்களாக புலிபார்வை படமும் தீபாவளிக்கு வெளிவரவிருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டு வந்தது. விஷால் தயாரித்துள்ள பூஜை படத்தை வாங்கி தமிழகம் முழுக்க வெளியிடும் வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்புதான் புலிபார்வை படமும். ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிடுவது என்பது சாதாரண விஷயமில்லை. வேந்தர் மூவிஸ் எப்படி புலிபார்வை, பூஜை ஆகிய இரண்டு படங்களையும் தீபாவளிக்கு வெளியிடப்போகிறது? என்று திரையுலகினரே வியந்தநிலையில், தற்போது புலிபார்வை படத்தை தள்ளி வைத்துள்ளனர்.
புலிபார்வை படத்தை தீபாவளிக்கு வெளியிட தீர்மானித்தது ஏன்? பிறகு வாபஸ் பெற்றது ஏன்? கத்தி படத்துக்கு எதிர்ப்பு பலமாக இருப்பதால், ஒருவேளை அப்படம் ரிலீஸ் ஆகாமல் போனால் அந்த தியேட்டர்களில் புலிபார்வை படத்தை ரிலீஸ் செய்யலாம் என்ற திட்டத்திலேயே தீபாவளி வெளியீடு என்று விளம்பரம் கொடுக்கப்பட்டு வந்தது. கத்தி படம் வெளிவருவதால் அந்தப் படத்தின் மீது தமிழ் இன உணர்வாளர்களின் கவனம் குவிந்திருக்கும். இந்த நேரத்தில் சத்தமில்லாமல் புலிபார்வை படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் என்பதும் இன்னொரு காரணம்...! இப்படி எல்லாம் திட்டமிட்டும் கடைசிநேரத்தில் புலிபார்வை படத்தை தீபாவளிக்கு வெளியிடும் திட்டத்தை கைவிட்டுவிட்டனர். காரணம்.. பூஜை படத்தை 20 கோடி கொடுத்து வாங்கி இருப்பதால் அந்தப் பணத்தை லாபத்துடன் திரும்ப எடுக்க வேண்டும் என்பதால் பூஜை படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளனர்.