டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் வாரிசு அபிஷேக் பச்சன். நடிகரான இவர் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர் தயாரித்த பா படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. தற்போது படங்களில் நடித்தும், படங்களை தயாரித்தும் வருகிறார். இந்நிலையில் தான் படம் தயாரிப்பதை வெறுப்பதாக கூறுகிறார் அபிஷேக். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, பா படத்தில் தயாரிப்பாளராக கிடைத்தது அதிர்ஷ்டம் தான். எனக்கு படங்கள் தயாரிக்க பிடிக்கவில்லை, படம் தயாரிப்பதை நான் வெறுக்கிறேன். பா படத்தில் நடிக்கவும் செய்து தயாரிக்கவும் செய்தேன். ஒரேநேரத்தில் இரண்டு வேலைகளை பார்ப்பது சற்று கடினம். நடிக்காமல் படம் தயாரிப்பது பிடித்து இருக்கிறது. தற்போது நான், எனது அப்பா அமிதாப் மற்றும் தனுஷ் வைத்து, பால்கி இயக்கத்தில், ''ஷமிதாப்'' என்ற படத்தை தயாரித்து வருகிறேன். இந்தப்படத்தில் நான் தயாரிப்பாளர் மட்டும் தான். படம் தயாரிப்பது என்பது மிகவும் கஷ்டமான வேலை என்று கூறியுள்ளார்.