ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு காலத்தில் கணுக்கால் கவர்ச்சியை காட்ட வேண்டும் என்று சொன்னாலே கடித்து தின்று விடுவது போன்று டைரக்டர்களை முறைத்துப் பார்த்தவர்தான் பூர்ணா. ஆனால் அவர் அறிமுகமான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கொடைக்கானல், கந்த கோட்டை, துரோகி, வித்தகன் என எந்த படமும் வெற்றி பெறவில்லை.
அதனால் ராசியில்லாத நடிகை என்று ஓரங்கட்டப்பட்டார் பூர்ணா. இருப்பினும் அண்டை மாநில மொழிப்படங்களில் நடிக்கச் சென்றாலும், மீண்டும் மீண்டும் தமிழில் முயற்சிகளை தொடர்ந்த பூர்ணாவுக்கு கிடைத்த ஜன்னல் ஓரம், தகராறு போன்ற படங்களும் வழக்கம்போல் ஏமாற்றி விடவே, தற்போது ஜெயம்ரவி நடிக்கும் அப்பாடக்கர் படத்தில் குத்துப்பாட்டுக்கு நடனமாடியிருக்கிறார். சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் அஞ்சலி ஆடியது போன்று இந்த பாடலில் ஜெயம்ரவியுடன் பூர்ணா ஆடியிருக்கிறாராம்.
சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் நடைபெற்ற அந்த பாடல் காட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆடைகுறைப்பு செய்து ரவுண்டு கட்டி ஆடியிருக்கிறாராம் பூர்ணா. இந்த சேதியறிந்த அவரது சினிமா உலக தோழிகள் சிலர், குத்துப்பாட்டுக்கு ஆடி எதற்காக உனது இமேஜை கெடுத்துக் கொள்கிறாய்? என்று அவரை மூடுஅவுட் செய்தார்களாம்.
அதனால் டென்சனான பூர்ணா, குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடுவது ஒன்றும் அசிங்கமான விசயமில்லை. அதுவும் ஒரு கலைதான். அதிலும் நான் ஒரு டான்சர். அதனால் என்னிடம் போய் நடனத்தைப் பற்றி இப்படியெல்லாம் சொல்லாதீர்கள் என்று அவர்களிடம் கடிந்து கொண்டாராம் பூர்ணா.