இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜய் நடித்துள்ள கத்தி படம் தீபாவளி அன்று திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டு விட்டது. படத்தின் ஆடியோ மற்றும் செல்பி புள்ள பாடலை வெளியிட்டவர்கள். முன்பாக படத்தை சென்சார்போர்டுக்கு அனுப்பி யு சான்றிதழை பெற்று விட்டனர்.
அதோடு, கத்தி படத்தின் டிக்கெட் புக்கிங்கையும் நேற்று முதல் ஆரம்பித்து விட்டார்கள். நேற்றைய தினம் விளம்பரங்கள் வெளியானதை அடுத்து தமிழகமெங்கிலும் கத்தி வெளியாகும் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் படையெடுக்கத் தொடங்கி விட்டனர். அதனால் புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட சில ஏரியாக்களில் டிக்கெட் கவுண்டரை திறந்த சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாம்.
இதற்கிடையே, கத்தியை வாங்கியிருக்கும் தியேட்டர்காரர்களும் ஐங்கரன் பிலிம்சில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில், ஏற்கனவே சில அரசியல் கட்சிகளும் சில அமைப்புகளும் கத்தி திரையிடப்படும் தியேட்டர்கள் முன்பு போராட்டங்களை நடத்துவோம் என்று அறிவித்திருப்பதால், அதை தடுத்து நிறுத்தும் முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் நேற்று சென்னையில் போலீஸ் கமிஷனரை சந்தித்து கத்தி படத்துக்கு பாதுகாப்பு தருமாறு மனு கொடுத்துள்ளாராம் கருணா மூர்த்தி.