ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சொத்து குவிப்பு வழக்கில் கைதான ஜெயலலிதா 20 நாட்களாக பெங்களூர் சிறையில் இருந்து விட்டு உச்சநீதிமன்றம் அளித்த ஜாமீன் காரணமாக நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இதை அதிமுகவினர் தமிழகமெங்கும் இனிப்பு வழங்கி, பட்டாசுகள் வெடித்து தீபாவளித்திருநாள் போன்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும் என்று ஏற்கனவே உண்ணாவிரதம இருந்த தமிழ்த்திரையுலகினரும் இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர். அதோடு அவரை வரவேற்று வாழ்த்தியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்தும் ஜெயலலிதாவை வாழ்த்தி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், நீங்கள் ஜாமீனில் விடுதலை அடைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீங்கள் மன அமைதியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன். உங்களுக்காக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ள ரஜினி, ஜெயலலிதாவுக்கு தீபாவளி வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளர்.