ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மிகவும் வித்தியாசமான கதைகளத்துடன் எடுக்கப்பட்டு வரும் பிகே படத்திற்காக அமீர் கான், பல மாதங்களுக்கு முன்பிருந்தே தன்னை தயார்ப்படுத்தி வந்தாராம். இந்த படத்தில் போஜ்புரி மொழி முக்கிய இடம் வகிப்பதால், இந்த படத்திற்காக போர்ஜ்புரி மொழியையும் கற்றாராம் அமீர்கான். இந்த படத்தில் அவரது கேரக்டர் யதார்த்தமாகவும், நகைச்சுவை கலந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக சாந்தி பூஷண் என்ற போஜ்புரி டிவி எழுத்தாளரிடம் பிரத்யேகமாக போஜ்புரி மொழியை கடந்த 2 ஆண்டுகளாக பயின்று வந்தாராம்.
படத்தின் சூட்டிங்கின் இடையேயும், சூட்டிங் இல்லாத போதும் அமீர்கான் போஜ்புரி மொழியை கற்றுக் கொண்டாராம். இந்த மொழியை கற்றுக் கொள்வது கடினம் என்பதால் இதற்காக அவர் பெரும் முயற்சி மேற்கொண்டாராம். இது பற்றி சாந்தி பூஷணிடம் கேட்ட போது, விது வினோத் சோப்ரா அலுவலகத்தில் இருந்து ராஜூஜி ஹிரானி என்னை தொடர்பு கொண்டு விபத்தைச் சொன்னார். பிகே படத்தின் வசனங்களையும் கொடுத்து, இதனை போஜ்புரி இந்தி மொழிக்கு மொழி பெயர்த்து தர வேண்டும் என்றும், அது ரசிகர்களுக்கு புரியும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கூனார். வசனங்கள் தவிர பிரச்யேகமாக அமீர்கானுக்கு அவரது வீட்டிற்கு சென்று இந்த மொழியை நான் கற்றுக் கொடுத்தேன். இதனால் அந்த வசனங்களை எழுதவும், படிக்கவும் அமீர்கான் கற்றுக் கொண்டார். சந்தேகம் வரக் கூடும் என்பதால் என்னையும் சூட்டிங்கின் போது உடன் இருக்கும்படி கூறினார். மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் அமீர்கான் இதனை கற்றுக் கொண்டார்.
அவர் காரில் பயணம் செய்யும் போதும் நான் அவருடன் இருந்து இதனை கற்றுக் கொடுத்தேன். அமீருக்கு இந்த மொழி மிகவும் பிடித்திருந்தது. டிரைலரில் அவர் கூறும் துகர் துகர் என்ற வார்த்தை போஜ்புரியின் அவருக்கு பிடித்த வார்த்தை தான் என தெரிவித்துள்ளார்.