தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹேப்பி நியூ இயர் படத்தின் புரோமோஷன் பணிகளை முடித்து விட்ட தீபிகா படுகோனே, இந்த ஆண்டு தீபாவளியை தனது குடும்பத்துடன் கொண்டாட உள்ளாராம். தீபிகாவின் குடும்பம் பெங்களூருவில் வசித்து வருகிறது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக தீபிகா தனது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடவில்லையாம்.
இந்த ஆண்டு படங்கள் அனைத்தையும் முடித்து விட்டு பிரியாக இருப்பதால் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் தீபிகா ஓய்வெடுக்க உள்ளதால் நிச்சயமாக அவர் குடும்பத்துடன் தான் தீபாவளியை கொண்டாட உள்ளாராம். தொடர்ந்து 2 நாட்கள் தனது குடும்பத்துடன் இருக்கவும் தீபிகா திட்டமிட்டுள்ளாராம். வெகு நாட்களுக்கு பின் இந்த ஆண்டு தீபாவளியை தனது குடும்பத்துடன் கொண்டாட உள்ளதாலும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அவரது படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாலும் இந்த தீபாளியை தீபிகா மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் ஸ்பெஷலாக நினைத்து கொண்டாடி வருகின்றனர்.