Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதுமுக டைரக்டருக்கு சிபாரிசு செய்த சசிகுமார்!

19 அக், 2014 - 10:26 IST
எழுத்தின் அளவு:

சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி, அதில் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்தார் சசிகுமார். அதையடுத்து, நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன் ஆகிய படங்களில் நடித்தவர் சசிகுமார். தற்போது பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் கரகாட்டக்காரன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும், தனது நட்பு வட்டாரத்தினருக்கு சிபாரிசு செய்யும் பழக்கமுள்ள சசிகுமார், தற்போது முருகாற்றுப்படை என்ற படத்தை இயக்கியுள்ள முருகானந்தம் என்ற புதுமுக இயக்குனருக்கு சிபாரிசு செய்திருக்கிறார். இதுபற்றி முருகானந்தம் கூறுகையில், பாலா சேது படத்தை இயக்கியபோது அந்த படத்தில் சசிகுமார் உதவியாளராக பணியாற்றினார். நான் புரொடக்சனில் வேலை செய்தேன். அப்போது நாங்கள் நண்பர்களாகி விட்டோம்.


அதையடுத்தும் பல படங்களில் புரொடக்சன் மேனேஜராக வேலை செய்தேன். ஆனால் சின்ன வயதில் இருந்தே நாடகத்தில் ஆர்வம் இருந்ததால் எதிர்காலத்தில் படம் இயக்க வேண்டும் என்ற ஆர்வமும் எனக்குள் இருந்து கொண்டிருந்தது. அதனால் இயக்குனர்கள் படம் இயக்குவதையும் அவ்வப்போது கவனித்து வந்தேன்.


அந்த அனுபவத்தைக் கொண்டுதான் பின்னர் படம் இயக்க முடிவு செய்தேன். கதை சொல்லி வந்தேன். அப்போது முருகாற்றுப்படை என்ற கதையை நான் சிலரிடம் சொல்லி வந்தபோது நான் புரொடக்சன் மேனேஜர் என்பதால் என்னை இயக்குனராக்க தயங்கினர்.அப்போது முருகாற்றுப்படை தயாரிப்பாளரை, நடிகர் சசிகுமாரிடம் அழைத்து சென்றேன்.


அப்போது, முருகானந்தத்தை நம்பி படம் கொடுங்கள். அவர் நல்ல திறமையானவர். அவரால் கண்டிப்பாக ஹிட் படத்தை தர முடியும் என்று உத்தரவாதம் கொடுத்தார். அதன்பிறகுதான் என்னை நம்பி முருகாற்றுப்படை தயாரிப்பாளர் படம் கொடுக்க முன்வந்தார். ஆக, இந்த படத்தை நான் இயக்கியதற்கு சசிகுமாரின் சிபாரிசு முக்கிய காரணம் என்கிறார் முருகானந்தம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in