தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிக்க ஜீது ஜோசப் இயக்கி கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். இப்படம் தமிழில் கமல்ஹாசன், கௌதமி மற்றும் பலர் நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி, கேரளா மற்றும் பல பகுதிகளில் படமாகி வருகிறது. ஒரு அழகான குடும்பத்துக்குள் எதிர்பாராமல் நடக்கும் ஒரு பிரச்சனையை அந்தக் குடும்பத்தினர் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை பரபரப்பாக சொல்லி 50 கோடிக்கும் மேல் வசூலித்த படமாக அமைந்ததுதான் த்ரிஷ்யம். இப்படம் தற்போது இந்தியன் பனோரமா பிரிவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள 45வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட உள்ளது.
மலையாளத்தைத் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. தற்போது ஹிந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது. அநேகமாக சைப் அலிகான், மோகன்லால் கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.
தற்போது தமிழில் எடுக்கப்பட்டு வரும் பாபநாசம் படத்தை த்ரிஷ்யம் படத்தின் காட்சிக்குக் காட்சி காப்பி என எடுக்காமல் தமிழுக்காக பல காட்சிகளை மாற்றியிருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் சண்டைக் காட்சி என்ற ஒன்றே இல்லை. ஆனால், சமீபத்தில் கமல்ஹாசன் சண்டைக் காட்சியில் நடித்த போது காயம் ஏற்பட்டதை வைத்துதான் இந்த தகவல் வெளியாகியுள்ளது. பாபநாசம் படத்தின் நெருங்கிய வட்டாரங்களிடம் விசாரித்த போதும், வழக்கமாக ரீமேக் படங்களை எடுப்பது போல் இந்தப் படத்தை எடுக்கவில்லை என்று மட்டும் தெரிந்தது.