ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
விஷால் நடித்த திமிரு படத்தில் அதிரடி வில்லியாக நடித்தவர் ஸ்ரேயா ரெட்டி. ஆனால் அதையடுத்து விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை 2008ல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். பின்னர் சில பட வாய்ப்புகள் தேடிச்சென்றபோது தனக்கு நடிப்பில் ஆர்வமில்லை என்று தவிர்த்து வந்தார் ஸ்ரேயா ரெட்டி.
ஆனால், தற்போது வீட்டில் ஓய்ந்திருக்க போரடித்ததால், அண்டாவக்காணோம் என்ற படத்தில் மீண்டும் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாகவே மாறி நடித்துக் கொண்டிருக்கிறார் அவர். மேலும், மதுரைக்கதைக்களம் என்பதால் அந்த ஏரியாவில் தற்போது முகாமிட்டிருக்கும் ஸ்ரேயா ரெட்டி, அங்குள்ள மக்களிடம் நெருக்கமாக பழகி அவர்கள் பேசும மதுரை தமிழை போன்று தானும் பேசி நடித்து வருகிறாராம்.
அதோடு, அந்த மக்களின் நடை உடை பாவணைகளையும் தனது நடிப்பில் பிரதிபலித்து வருகிறாராம். அதனால் இதற்கு முன்பு ப்ரியாமணி, லட்சுமிமேனன் என எத்தனையோ நடிகைகள மதுரை மண்வாசனைக் கதைகளில் நடித்திருந்தபோதும், அவர்கள் அத்தனை பேரையும் மிஞ்சி விடும் வகையில் நடித்துக்கொண்டிருக்கிறாராம் ஸ்ரேயா ரெட்டி.
அதனால் இந்த அண்டாவக் காணோம் படம் திரைக்கு வரும்போது மதுரை கேரக்டர் என்றால் கூப்பிடு ஸ்ரேயா ரெட்டியை என்று சொல்லும் அளவுக்கு அவரது நடிப்பு அமைந்திருப்பதாக அப்படக்குழுவினர் சொல்கிறார்கள். இந்த சேதியறிந்து மதுரை கதைக்களத்தில் படம் இயக்கவிருககும் சில டைரக்டர்கள் ஸ்ரேயா ரெட்டியின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.