பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிகரம் விஷன் மீடியா தயாரித்துள்ள படம் முருகாற்றுப்படை. புதுமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கியுள்ள இந்த படத்தில் புதுமுகங்கள் சரவணன்- நவீகா ஜோடி சேர்ந்துள்ளனர். இவர்களுடன் ரமேஷ்கண்ணா, தேவதர்ஷினி, ராஜசிம்மன் உள்ளிட்ட சிலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ விழா நேற்று காலை சென்னையில் நடைபெற்றது. அதையடுத்து மாலை 6 மணி அளவில் பிரஸ்மீட் நடைபெற்றது.
அப்போது நடிகர் ரமேஷ்கண்ணா பேசுகையில், இன்றைக்கு நிறைய புதுமுக டைரக்டர்கள் சினிமாவே தெரியாமல் படமெடுக்க வருகிறார்கள். ஒரே காட்சியை திரும்பத்திரும்ப படமாக்கி பட்ஜெட்டை ஏற்றி விடுகிறார்கள். அதனால் யாராக இருந்தாலும் சினிமாவை முறையாக பயிற்சி பெற்றுவிட்டு படமெடுக்க வருவதுதான் நல்லது. மேலும், இந்த படத்தை இயக்கியுள்ள முருகானந்தம் பல படங்களில் புரொடக்சன் மேனேஜராக பணியாற்றியவர். ஆனால், சினிமாவில் நீண்டகாலம் அனுபவம் பெற்றவர். அந்த அனுபவத்தைக்கொண்டு இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அதிலும் ஒரு நல்ல கலகலப்பான கதையை அனைவரும குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இயக்கியிருக்கிறார். படத்தில் ஒரு இடத்தில்கூட கெட்ட வார்த்தைகள் கிடையாது.
இந்த படத்தில் நானும், தேவதர்ஷினியும் ஜோடியாக நடித்திருக்கிறோம். எங்களது கெமிஸ்ட்ரி ரொம்ப நன்றாக ஒர்க்அவுட்டாகியிருப்பதாக சொல்கிறார்கள். தேவதர்ஷினியுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. எந்தவொரு காட்சியாக இருந்தாலும் நல்ல டயலாக் இருக்க வேண்டும் என்று நினைப்பார். அதனால் தனது கைக்கு டயலாக் பேப்பர் வந்ததும், டைரக்டரிடம் தனது பாணிக்கு மாற்றச்சொல்லி நடிப்பார். நாங்கள் இந்த படத்தில் காமெடிதான் செய்திருக்கிறோம். ஆனால் அது படத்தின் ஹைலைட்டாக இருக்கும்.
அதோடு, தேவதர்ஷினியின் நடிப்பு இந்த படத்துக்கு ப்ளசாக அமைந்திருக்கிறது. என்னைக்கேட்டால் மனோரமா ஆச்சி, கோவை சரளாவுக்கு பிறகு ஒரு நல்ல காமெடி நடிகை யார் என்றால் தேவதர்ஷினியைத்தான் சொல்வேன். அந்த அளவுக்கு அற்புதமாக நடித்திருக்கிறார் என்றார் ரமேஷ்கண்ணா.