டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்த கோவிந்தா, நீண்ட இடைவெளிக்கு பிறகு ''கில் தில்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கோவிந்தாவுடன் ரன்வீர் சிங், பிரணீதி சோப்ரா, அலி ஜாபர் ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இப்படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க முக்கிய காரணமே என் மனைவி தான் என்று கூறியுள்ளார் கோவிந்தா.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, கில் தில் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அந்த ரோலை பார்த்து, நான் நடிக்க தயங்கினேன், கிட்டத்தட்ட மறுத்துவிட்டேன் என்றே கூறலாம். பிறகு என் மனைவியிடம் ரன்வீர் உள்ளிட்டவர்கள் பேசினர். அதன்பின் என் மனைவி என்னிடம் பேசினார், எதற்கு வீட்டிலேயே சும்மா உட்கார வேண்டும், போய் நடியுங்கள் வருகின்ற வாய்ப்பை ஏன் மறுக்கிறீர்கள் என்று கூறி இப்படத்தில் நடிக்க என்னை சம்மதிக்க வைத்தார் என்று கூறியுள்ளார்.