துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
தமிழில் பட வாய்ப்பு இல்லாமல் போனதும் மற்ற மொழிப்படங்களில் நடிக்கப்போவார்கள் கதாநாயகி நடிகைகள்.
இந்த வழக்கம் நடிகைகளுக்கு மட்டுமல்ல இப்போது கதாநாயகர்களுக்கும் பொருந்தும்.
தமிழில் பிஸியாக இருந்த சரத்குமார், பிரபு போன்ற ஹீரோக்கள் இங்கே மார்க்கெட்போனதும், மற்ற மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார்கள்.
இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பவர் பரத்.
இவர் நடித்து கடைசியாக வெளியான படம் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி. இது பரத்துக்கு 25வது படமாகும். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே புதிய பட வாய்ப்பு ஏதும் பரத்தைத் தேடி வரவில்லை. எனவே ஏற்கனவே கமிட்டான ஏழு கடல் தாண்டி என்ற படத்தில் மட்டும் தற்போது நடித்து வருகிறார் பரத்.
தமிழில் பட வாய்ப்பு இல்லாததினால் மலையாளத்தில் நடிக்க விரும்பிய பரத், தற்போது புதிய மலையாள படமொன்றில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
1000 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் மலையாள நடிகர்கள் மக்பூல் சல்மான், பியோன் ஆகியோரும் நடிக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து நடிக்கிறார் பரத்.
1000 ரூபாய் நோட்டு ஒன்றால் இணைக்கப்படும் பலரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கவிருக்கிறார் ஏ.ஆர்.சி.நாயர்.
1000 படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.
திருவனந்தபுரம், தொடுபுலா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
பரத் கடைசியாக மோகன்லாலுடன் இணைந்து கூதரா என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.
1000 படம் வெற்றியடைந்தால் தொடர்ந்து மலையாளப்படங்களில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார் பரத்.