ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு திரைப்படங்களில் நடிப்பதையே விட்டு விட்டார். கடைசியாக அவர் நடித்த படம் 'விருதகிரி'. அந்தப் படத்தை அவரே இயக்கி நாயகனாகவும் நடித்தார். அரசியலில் முழு மூச்சாக இறங்கியதால் நடிப்பதை விட்டாலும், விஜயகாந்த் அவருடைய மகன் சண்முக பாண்டியனை நாயகனாக அறிமுகப்படுத்த முடிவு செய்தார். அதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டார். கடைசியாக சந்தோஷ் குமார் என்பவர் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டு தனது வீட்டு முன் பெரிய கூட்டம் ஒன்றை நடத்தி மகனையும், இயக்குனரையும் விஜயகாந்த் அறிமுகப்படுத்தி வைத்தார். 'சகாப்தம்' என தலைப்பிட்டு படப்பிடிப்பும் ஆரம்பமானது.
அதன் பின் படப்பிடிப்பு ஆரம்பமான கொஞ்ச நாட்களிலேயே சந்தோஷ் குமாருக்கும், விஜயகாந்துக்கும் பிரச்சனை ஏற்பட்டு சந்தோஷ் குமார் படத்தை விட்டு விலகினார். அதன் பின் சுரேந்தர் என்பவர் படத்தை இயக்கி வருகிறார். இப்போது அவரும் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இப்படத்திற்காக சிம்பு ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். பாடலைப் பாட வந்த சிம்புவை படத்தின் நாயகன் சண்முக பாண்டியன், தயாரிப்பாளர் சுதீஷ் ஆகியோர் வரவேற்றனர். பாடலைப் பாடி முடித்ததும் சிம்புவிற்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர். நட்பின் அடிப்படையில் சிம்பு அவர் நடிக்காத பல படங்களுக்கும் பாடுவார். அந்த அடிப்படையில்தான் இந்தப் படத்திலும் பாடியிருக்கிறார் என்கிறார்கள்.