ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள் கடந்த சில தினங்களுக்கு முன் 'ஹுட் ஹுட்' புயலால் பெரும் பாதிப்பை அடைந்தன. அதையடுத்து சிரஞ்சீவி, பவன் கல்யாண், மகேஷ் பாபு, ஜுனியர் என்டிஆர் உள்ளிட்ட பல தெலுங்கு நடிகர்களும், சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட தமிழ் நடிகர்களும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கினர். தமிழ் நடிகர்கள் உதவி செய்தது தெலுங்கு மீடியாக்களால் மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது. சிரஞ்சீவி, பவன் கல்யாண், பாலகிருஷ்ணா, மஞ்சு மனோஜ் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் அவர்களுடைய ரசிகர்கள் மூலமும் பல நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள். நடிகர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அவர்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். ஹைதராபாத்திற்கு அடுத்து விசாகப்பட்டிணம்தான் தெலுங்குத் திரையுலகின் முக்கிய இடமாக அமைந்துள்ளது. ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டதால், விரைவில் இங்கு பல ஸ்டுடியோக்களும் வர உள்ளன.
தெலுங்குத் திரையுலகின் மற்றுமொரு மையமாக விசாகப்பட்டிணம் விரைவில் மாற உள்ளது. தெலுங்கு நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மட்டுமே லட்சக் கணக்கில் நிவாரண நிதியை வழங்கி வருவதும், நடிகைகள் மற்றவர்கள் என பெரும்பாலானோர் நிவாரண நிதி வழங்காதது அங்குள்ள மீடியாக்கள் மூலம் சர்ச்சையாகி வருகிறது. இதனிடையே தெலுங்கின் தற்போதைய முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தமன் 19ம் தேதி ஹைதராபாத்தில் நிவாரண நிதி திரட்டுவதற்காக ஒரு இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இதில் நடிகர்கள் நாக சைதன்யா, நிதின், ஹன்சிகா மற்றும் பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதில் வசூலாகும் தொகையை ஆந்திர முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளார்கள்.