டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
3 என்ற படத்தில் இசையமைப்பாளரான அனிருத், அந்த படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற அதிரடியான ஒரு மெகா ஹிட் பாடலை கொடுத்தார். அதனால் ஒரே பாட்டில் உலகப்புகழ் பெற்றார். அப்படி அவர் ஆரவாரத்துடன் வளர்ந்து வந்த அதேநேரத்தில், நடிகை ஆண்ட்ரியாவுடனான உதட்டு முத்தத்தில் அவர் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தின.
அதனால், அதையடுத்து சில நாட்களாக மனசுடைந்து போன அனிருத், தனது அறையே கதியென்று கிடந்திருக்கிறார். அப்போது அவரது பெற்றோர்தான் இன்டர்நெட் யுகத்தில் இதெல்லாம் சாதாரண விசயம். நாளைக்கு இதைவிட இன்னொரு சர்ச்சை வரும்போது உனது பிரச்சினை காணாமல் போய் விடும் என்று அவரை தேற்றினார்களாம்.
ஆக, பெற்றோரின் அரவணைப்பினால் அந்த முத்த சர்ச்சையிலிருந்து மெல்ல மெல்ல வெளியே வந்திருக்கிறார் அனிருத். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரே படத்தில் கொலவெறி வைரல் என்று இணையதளம் மூலமாக நான் பிரபலமானேன். ஆனால் அந்த இணையதளமே எனது இமேஜை காலி பண்ணிடுச்சு. அதனால் ரொம்பவே குழம்பிப்போய் விட்டேன். ஆனால் பின்னர் கடவுள் அருளால் அதிலிருந்து முழுசாக மீண்டும் வெளியே வந்தேன்.
எதிர்நீச்சல், மான்கராத்தே என்று அடுத்தடுத்து மெகா ஹிட் கொடுத்த நான் இப்போது விஜய்யின் கத்தி படத்துக்கும் இசையமைத்து விட்டேன்.. அந்த வகையில் இப்போது ரொம்ப சந்தோசமாகவும், உற்சாகமாகவும் எனது இசைப்பயணம் சென்று கொண்டிருககிறது என்கிறார் அனிருத்.