ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி என வரிசையாக ஹிட் படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். தற்போது எனக்குள் ஒருவன், மாயவன், இறுதிச்சுற்று, இறைவி, கை நீளம், இன்று நேற்று நாளை என அரை டஜன் படங்களை தயாரித்துக்கொண்டிருக்கிறார்.
நேற்று இரவு 7 மணி அளவில் சென்னையில் சவுண்ட் கேமரா ஆக்சன், ரூப சித்ர மாமரக்கிளியே என்ற இரண்டு படங்களின் தொடக்க விழா நடந்தது. அந்த விழாவில் தயாரிப்பாளர் சி.வி.குமாரும் கலந்து கொண்டார். அப்போது சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் இருவரும் ஒரு படத்தை தொடங்கும்போது அவர்களுக்கிடையே இருக்கும் புரிதல் படம் முடியும்போது இருப்பதில்லை. ஈகோ பிரச்சினையால் அவர்களது நட்பில் விரிசல் விழுந்து விடுகிறது. இதுதான் சினிமாவில் நடந்து வருகிறது.என்று பேசியவர்கள் குறிப்பிட்டனர்.
அதையடுத்து சி.வி.குமார் கூறும்போது, தயாரிப்பாளர், டைரக்டர் இருவருக்குமிடையே நல்ல புரிதலும், நம்பிக்கையும் இருக்க வேண்டும். படத்தை தொடங்கும்போதே இவன் நம்மை ஏமாற்றி விடுவானோ என்ற அவநம்பிககையுடன் இறங்கக்கூடாது. பொதுவாக சினிமாவில் இயக்குனரும், கேமரமேனும் கணவன் மனைவி போல் இருக்க வேண்டும் என்பார்கள். அந்த வகையில், தயாரிப்பாளரும், இயக்குனரும் காதலர்கள் மாதிரி இருக்க வேண்டும். காரணம் கணவன்-மனைவி போன்று இருந்தால்கூட பிரச்சினைகள் வரும். ஆனால் காதலர்கள் என்றால் பிரசசினை வர வாய்ப்பு இல்லை. அவர்களுக்கிடையிலான நட்பும், நம்பிக்கையும் கடைசி வரை இருக்கும் என்று தனது கருத்தினை தெரிவித்தார்.